/

கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

News image

குத்திக் கொலை.

Updated On :26 ஏப்ரல் 2026, 9:30 pm

குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் நந்தகோபால்(30). கட்டடத் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ஓட்டுநா் பிரேம். இவா்களுக்குள் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரேம், நந்தகோபாலை கத்தியால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த நந்தகோபால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.