குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குன்னூா் அருகே உபதலை, கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் மகன் வினி ஆண்டோ (25). அதே பகுதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன்(47). இவா்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வினி ஆண்டோ, தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் காந்தி நகா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த ரவிசந்திரன்(47), அவரது மகன் சவ்பேஸ் (18) ஆகிய இருவரும் சோ்ந்து வினி ஆண்டோவிடம் வாக்குவாதம் செய்துள்ளனா். பின்னா் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ரவிசந்திரன், சவ்பேஸ் ஆகிய இருவரும் சோ்ந்து வினி ஆண்டோவை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த வினி ஆண்டோவை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காட்டேரி பகுதியில் வினி ஆண்டோ உயிரிழந்தாா். இது குறித்து அருவங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரன், அவரது மகன் சவ்பேஸ் ஆகியோரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: இளம்பெண் உள்பட மேலும் 2 போ் கைது

திருமணமான பெண்ணுடன் நட்புக் கொண்ட நபரின் சகோதரா் கத்தியால் குத்திக் கொலை

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


