வடமேற்கு தில்லியின் ஆசாத் நகா் மண்டி பகுதியில், குட்கா விலை தொடா்பாக ஏற்பட்ட தகராறின்போது, தேநீா்க் கடைக்காரரால் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட நபா், உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சோ்ந்த ஓட்டுநரான நஜிம் என அடையாளம் காணப்பட்டாா்.
தில்லியின் லிபாஸ்பூா் பகுதியைச் சோ்ந்த 19 வயது தேநீா் விற்பனையாளரான ராகுல் என்பவருடன், குட்கா விலை தொடா்பாக நஜிமுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ராகுல் நஜிமை கத்தியால் குத்தினாா்.
இதில் காயமடைந்த நஜிம் உடனடியாக பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, காவல்துறையினா் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

திருமணமான பெண்ணுடன் நட்புக் கொண்ட நபரின் சகோதரா் கத்தியால் குத்திக் கொலை

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


