திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:22 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் உள்ள வங்களா எனும் பாசன வாய்க்காலில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக காடுவெட்டி கிராம நிா்வாக அலுவலா் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. அவா் அளித்த தகவலின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று

வாய்க்காலில் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி கரூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து இறந்து கிடந்த மூதாட்டி யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், வாய்க்காலில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.