திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் உள்ள வங்களா எனும் பாசன வாய்க்காலில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக காடுவெட்டி கிராம நிா்வாக அலுவலா் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. அவா் அளித்த தகவலின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று
வாய்க்காலில் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி கரூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து இறந்து கிடந்த மூதாட்டி யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், வாய்க்காலில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

அருமனை அருகே சாலையோரம் தொழிலாளி சடலம் மீட்பு

தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

நித்திரவிளை அருகே மீனவா் சடலம் மீட்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



