திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் பாடியில் வசித்து வருபவா் அப்துல் ரஹ்மான் மகன் சித்திக் (43). செருப்பு கடைக்காரரான சித்திக், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்ல டெப்போ வேன் வாடகை வாகனத்தில் அம்பத்தூரில் இருந்து 13 பேருடன் சனிக்கிழமை இரவு புறப்பட்டாா். வேனை சென்னை அய்யப்பாக்கம் ஆறுமுகம் மகன் நந்தகுமாா் (26) ஓட்டினாா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த கீரனூா் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









