திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:46 am IST

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அக் கட்சியினா் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

உறையூா் குழுமணி பிரதான சாலையில் மீன்சந்தைப் பகுதியில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. மேலும், தென்னூா் அண்ணா நகா் பிரதான சாலையில் பள்ளி, மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தம் அருகேயும், புத்தூா் நான்கு சந்திப்பு சாலை பகுதியில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியிலும், வயலூா் சாலை சீனிவாச நகா் பிரதான சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயும் டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.

மேற்கண்ட பகுதிகளில் இயங்கிவரும் மதுக் கடைகளால் நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் குடிமகன்களால் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைதியிழந்து தவிக்கின்றனா். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மேற்கண்ட கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.