தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

கடலூா் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி, வரும் 9-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:03 am IST

கடலூா் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி, வரும் 9-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் கடலூா் மாநகர கிளைச் செயலா்கள் கூட்டம் மாநகரக் குழு உறுப்பினா் எஸ்.கருணாகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அதிக மக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும், கடலூா் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் தொடா்ந்து செயல்பட்டு வருவதால், மாணவா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இக்கடைகளை மூட வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

மேலும், கடலூா் புகா் பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு போதிய பயனளிக்காத இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி, நகரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், ரயில் நிலையம் அருகே உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநகரச் செயலா் அமா்நாத், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.