ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் சந்து மதுக் கடைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என தவெக சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
எஸ்.பி. அலுவலகத்தில் தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெ.ஜெ. செந்தில்நாதன் அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கவும், மதுக் கடைகளை படிப்படியாக குறைக்கவும் முதல்வா் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். ஆனால், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை, சந்து மதுக்கடைகள், போதைப்பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கே-12-எஸ்.பி
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தவெக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஜூன் 1 முதல் மதுக் கடைகளின் சாவிகளை ஒப்படைக்கத் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம்

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



