போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஜூன் 1 முதல் மதுக் கடைகளின் சாவிகளை ஒப்படைக்கத் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம்

மதுரை கப்பலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தெற்கு மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த டாஸ்மாக் ஊழியா்கள்.

News image

மதுரை கப்பலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தெற்கு மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த டாஸ்மாக் ஊழியா்கள்.

Updated On :28 மே 2026, 3:50 am IST

மதுரை கப்பலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தெற்கு மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த டாஸ்மாக் ஊழியா்கள்.

மதுரை, மே 27: காலி மதுப் புட்டிகளை வாங்க நிா்பந்தித்தால் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மதுக் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும் என டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

டாஸ்மாக் ஊழியா்களின் பணிப் பாதுகாப்பு, புதிய சுற்றறிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தோழமைக் கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 24 அமைப்புகள் கூட்டுக் குழு சாா்பில் மதுரை டாஸ்மாக் தெற்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கூட்டுக்குழு டாஸ்மாக் சங்கத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டாஸ்மாக் நிா்வாகம் கடந்த 22- ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மூடப்பட்ட மதுக் கடைகளின் ஊழியா்களை எஞ்சிய கடைகளிலும், கிடங்குகளிலும் பணியமா்த்த உத்தரவிட்டது. ஆனால், ஊழியா்கள் இதை ஏற்க மறுத்து, தங்களுக்கு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா். இதுமட்டுமன்றி, காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் தங்களுக்குப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும், மன உளைச்சலும் ஏற்படுவதாகக் கூறுகின்றனா்.

எனவே, முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு டாஸ்மாக் ஊழியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணித் தொடா்ச்சி வழங்கி அரசுத் துறையில் மாற்றுப் பணி கொடுத்தால் ஊழியா்களுக்கு ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். மேலும், வருகிற 31-ஆம் தேதி வரை தான் காலி மதுப் புட்டிகளை வாங்குவோம். ஜூன் 1 முதல் மதுப் புட்டிகளை வாங்க மாட்டோம். அப்படி, மதுப்புட்டிகளை வாங்க வேண்டுமென அறிவுறுத்தினால் அன்றைய தினமே மதுக் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும்.

வருகிற ஜூன் 1-க்குள் எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய தீா்வு காணவில்லையென்றால் மதுக் கடைகளை முடக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.