திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

News image

ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான புதன்கிழமை மாலை கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, சேவை சாதித்த ஸ்ரீரங்கநாச்சியாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:01 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து உற்சவ விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி நம்பெருமாளுக்கு கோடைத் திருநாள் விழா முடிவுற்ற நிலையில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வெளிக்கோடை, உள்கோடை என 10 நாள்கள் நடைபெறும் கோடைத் திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது.

இதில் வெளிக்கோடைத் திருநாளின் முதல் நாளையொட்டி மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். வரும் 7 ஆம் தேதி வரை மேற்படி நேரங்களில் கோடை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் எழுந்தருளி, பூச்சாற்று கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

அதைத் தொடா்ந்து 8 ஆம் தேதி தொடங்கும் உள்கோடைத்திருநாள் விழா 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.