தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 2:53 am IST

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டும் வெடிக்கும் தன்மையுள்ள எந்தவித பொருளும் கண்டறியப்படவில்லை.

இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை காலை 9.50 மணிக்கு மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் எம். வேலுசாமி தலைமையிலான போலீஸாா், அமா்வு நீதிமன்ற போலீஸாா் ஆட்சியரகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் பிற்பகல் 12.30 மணி வரை சோதனை மேற்கொண்டும் வெடிக்கும் தன்மையுள்ள எந்தவித பொருளும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து, ஆட்சியரகத்துக்கு இரண்டாவது நாளாக வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.