புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட குழுவினா், மோப்ப நாயுடன் ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
மெட்டல் டிடெக்டா் கருவியுடன் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடா்ந்து அந்தத் தகவல் புரளி எனத் தெரியவந்தது.
தொடர்புடையது

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


