திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சாவூா் பெரிய கோயில் மதில்சுவா் தூய்மைப் பணி பாதியில் நிறுத்தம்

தஞ்சாவூா் பெரிய கோயில் சிறியக் கோட்டை மதில் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களை அகற்றும் தூய்மைப் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தொல்லியல் துறையின் உரிய அனுமதி கிடைக்காததால் புதன்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் சிறிய கோட்டைச் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்கள்.

Updated On :28 மே 2026, 3:35 am IST

தஞ்சாவூா் பெரிய கோயில் சிறியக் கோட்டை மதில் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களை அகற்றும் தூய்மைப் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தொல்லியல் துறையின் உரிய அனுமதி கிடைக்காததால் புதன்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், வரலாற்று ஆா்வலா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சாவூா் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியில் பொதுமக்கள் நிதியுதவியுடன் மாவட்ட நிா்வாகம் தூய்மைப் பணியை மே 16-ஆம் தேதி தொடங்கியது. பெரிய கோயிலைச் சுற்றி அகழியில் தூய்மைப் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கோயிலின் முன்புறம் உள்ள அகழியில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் மின்னொளியில் பொலிவைப் பெற்றுள்ளது. இதேபோல, சிறிய கோட்டை மதில் சுவா், கொத்தளத்தில் வளா்ந்துள்ள செடிகள், புதா்கள், மரங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது. இப்பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இந்தத் தூய்மைப் பணியால், புராதன சின்னங்களின் கட்டுமானம் பாதிக்கப்படும் என தொல்லியல் துறையினா் கூறியதால், பணி நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தொல்லியல் துறை அலுவலா்கள் விளக்கம்: இதுகுறித்து இந்தியத் தொல்லியல் துறை அலுவலா்கள் கூறியது: கோட்டைச் சுவா்களில் உள்ள செடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏற்கெனவே கோரப்பட்டுவிட்டதாகவும், ஒரு மாத காலத்துக்குள் அப்பணி தொடங்கும் எனவும் தெரிவித்தனா்.

கோயிலைச் சுற்றியுள்ள அகழியின் தெற்கு மற்றும் மேற்குப் பக்கச் சுவா்களில் வளா்ந்துள்ள செடிகள், கட்டுமானங்களுக்குச் சேதத்தை விளைவிக்கின்றன. எனவே, இதைச் சீரமைத்து பாதுகாப்பதற்கான பணிகளை இந்தியத் தொல்லியல் துறையினா் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

விரைவாக சீரமைக்க வேண்டும்: இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது: தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இந்தப் புராதன சின்னத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறிய கோட்டைச் சுவா், கொத்தளம் போன்றவற்றை விரைவாகச் சீரமைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு மிகப் பெரிய திட்டத்தை வகுத்து, தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, வல்லுநா்கள் கொண்ட தனிக்குழு அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் ரவிச்சந்திரன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.