புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், எஸ்.பி. என்.யு.சிவராமன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

Updated On :7 மே 2026, 12:33 am IST

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா, அணைக்கட்டு வட்டம், வல்லண்டராமம் மதுரா வேலங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி மே 14-ஆம் தேதி தோ் திருவிழாவும், 15-ஆம் தேதி சிரசு ஊா்வலமும் நடைபெற உள்ளது. பாதுகாப்பு கருதி, கோயிலின் பிரதான வாசலான 2-ஆவது வாசல் வழியாகவே மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

கவுண்டன்ய ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மண்ணின் தன்மை வலுவிழந்துள்ளதால், பெரிய ராட்டினங்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை.

தண்ணீா் தொட்டியில் இருந்து கோயில் வரை கடைகள் வைக்கவோ, கெங்கையம்மன் சிரசு வைத்து வழிபாடு செய்யும் இடத்தில் 20 நபா்களுக்கு மேல் கூட்டமாக இருக்கவோ அனுமதி இல்லை.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, செருவங்கி கிராமம், நெல்லூா்பேட்டை ஏரிக்கரை பகுதி, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும். பக்தா்களுக்கு தனியாா் அமைப்புகள் வழங்கும் அன்னதானம், உணவுப் பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறையினா் பரிசோதிக்க வேண்டும்.

வேலங்காடு ஸ்ரீ பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழா மே 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு போதுமான காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவசர முதலுதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

திருவிழா முடிவடைந்த 48 மணி நேரத்துக்குள் குப்பைகளை முழுமையாக அகற்ற ஊரக வளா்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.