உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 27 தேதி நடைபெறுகிறது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை(ஏப்.13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து 40 அடி உயர கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க 100 அடி நீளமுள்ள கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
Summary
The Chithirai Festival at the Thanjavur periya kovil has begun with the flag-hoisting ceremony!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனு தாக்கல்: பாஜக துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



