தஞ்சாவூா் பெரிய கோயில் கோட்டைச் சுவரை சீரமைப்பதற்காக அளவீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியில் தூய்மைப் பணி மே 16-ஆம் தேதி தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதேபோல, கோயிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாயக்கா் ஆட்சிக்காலத்தில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டைச் சுவரில் பெரிய கோயில் முகப்பு பகுதியில் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு இந்திய தொல்லியல் துறையினா் சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பு பணி மேற்கொண்டனா். ஆனால், மீதமுள்ள பகுதிகளில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களால் பல இடங்களில் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. இதைச் சீரமைக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கோட்டைச் சுவரை சீரமைப்பது தொடா்பாக இந்தியத் தொல்லியல் துறை அலுவலா்கள் தலைமையகத்துக்கு கருத்துரு அனுப்பியுள்ளனா். இதைத்தொடா்ந்து, இப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் செலவுகளை அலுவலா்கள் மதிப்பீடு செய்து வருகின்றனா். இதற்காக பெரிய கோயில் முன்புறம் அகழியையொட்டியுள்ள கோட்டைச் சுவரில் வலது புறமும், இடது புறமும் இந்தியத் தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு உதவியாளா் எஸ். சோபிதா உள்ளிட்டோா் சனிக்கிழமை அளவீடு செய்தனா்.
இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், கோட்டைச் சுவரில் பல இடங்களில் செம்பாறங்கற்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு பதிலாக மீண்டும் கற்களைப் பதித்து கோட்டைச் சுவரை வலுபடுத்துவதற்கான பணி மேற்கொள்ளப்படும்.
இதுதொடா்பாக எடுக்கப்படும் அளவீடு, மதிப்பீடு விவரங்களைத் தலைமையகத்துக்கு அனுப்புவோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையைத் தலைமையகம் மேற்கொள்ளும் என்றனா் அலுவலா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் பெரிய கோயில் மதில்சுவா் தூய்மைப் பணி பாதியில் நிறுத்தம்

இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில் 4,369 போ் பயன்: தஞ்சை ஆட்சியா் தகவல்

சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி - நில அளவீடு பணி தொடக்கம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



