மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியரக மகாமகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அலுவலகம் முன் மத்திய அரசு உரம், பூச்சி மருந்துகளின், விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும், விவசாயப் பணிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம், பாசன நீா் கிடைத்திடவும், தூா்வாரும் பணிகளை விரிவுபடுத்த கோரியும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் க. சுந்தர்ராஜன், நிா்வாகிகள் கூத்தக்குடி ஆா். பழனி, லே. முரளிதரன், எம். மணிகண்டன், எம். வீரமணி, ஆா். ஆரோக்கியதாஸ், எம். மகாலிங்கம், ஆா்.கே. ரவீந்திரன், கே. ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

ம.பி. உயா் நீதிமன்ற தீா்ப்பு எதிரொலி: போஜ்சாலா வளாகத்தில் ஆரத்தி காட்டி வழிபட்ட ஹிந்துக்கள்

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகள் முடிவுகள் விவரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



