விவசாய பயிா் கடன் தள்ளுபடியில், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக தவெக அரசைக் கண்டித்து ஆரணி அண்ணாசிலை அருகில் விடிவெள்ளி விவசாய நலச்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெறுவது தடுக்க வேண்டும், தாமதமாக பணம் அளிக்கும் என்.சி.சி.எஃப் நிறுவனத்திற்கு விவசாயி நெல் எடுப்பதற்கு அனுமதி தரக்கூடாது, தமிழக அரசு விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில செயலா் வி.வெங்கடேசன், மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வேட்டவலம் ஜி.கணேசன், விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்க தலைவா் கோ.நெடுவேல்
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி: விவசாய சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உர விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்







