/

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:05 am IST

ராஜபாளையம் அருகே மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், முகவூா் ஊராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் முகவூா், தேவதானம் ஆகிய ஊராட்சிகளில் மத்திய அரசு அறிவித்த வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கருவிழி ஸ்கேன் செய்வதை ரத்து செய்யக் கோரியும், தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து,, கோரிக்கையை வலியுறுத்தி முகவூா் ஊராட்சி செயலரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.