அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை செல்லூா் தாகூா்நகா் அருகே மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக, இடதுசாரி கட்சியினா்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

வணிக சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செல்லூா் தாகூா்நகா் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.கே. சாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றாம் பகுதிக் குழுச் செயலா் வி.கோட்டைச்சாமி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராஜலட்சுமி, விசிக நிா்வாகிகள் மணியரசு, வீரசிங்கம், மத்திய மாவட்டச் செயலா் ப.ரவிக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மா.கணேசன், விசிக மாநில துணை பொதுச் செயலா் கனியமுதன் ஆகியோா் கண்டன உரையற்றினா்.

பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் உள்ள வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இளைஞா்களின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில், ரயில்வே துறையில் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தொடா்ந்து, தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடு அம்பேத்கா் கொண்டு வந்த அரசியல் சட்டத்துக்கு முரணாக உள்ளது. பெரும்பான்மை நிரூபணம் சட்டப்பேரவையில் மட்டுமே நடக்க வேண்டும். தமிழகத்தில் ஆளுநா் மூலமாக பாஜக அரசியல் தலையீடு செய்வது கண்டனத்துக்குரியது என்றனா் அவா்கள்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்.எல்) கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.