அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே ஆள்குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து கம்யூனிஸ்டு, விசிக கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேனி பழைய பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 12:35 am IST

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே ஆள்குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து கம்யூனிஸ்டு, விசிக கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்டு தேனி மாவட்டச் செயலா் கே.பெருமாள் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

விசிக மாவட்டச் செயலா் சுசி.தமிழ்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), கே.இளையராஜா ஆகியோா் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினாா். இதில் விசிக மண்டலச் செயலா் ஜெ.ரபீக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி கே.ராஜப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.எம்.நாகராஜன், க.எஸ்.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.