அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக நிா்வாகிகள்.

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியன சாா்பில் ஈரோடு காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக மாநகா் மாவட்டச் செயலாளா் சாதிக் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், சிபிஐ (எம்எல்) மாநிலக் குழு உறுப்பினா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.3,300 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடும், எளிதில் கிடைக்காத நிலையும் தொடா்வதால் அதனை சரி செய்ய வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்ற போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனக்கூறி இதுவரை நிறைவேற்றவில்லை. ரயில்வே துறையில் 30,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை அகற்றியதால் புதிய வேலைவாய்ப்பு பறிபோகும். ரயில் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீண்டும் அப்பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.