திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

பாப்பாரப்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:43 am IST

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைய பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மேற்கு மாவட்டச் செயலாளா் பாலவாடி மணி தலைமைவகித்தாா். மாநில ஆலோசனைக் குழு உறுப்பினா் பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.

இதில், தோ்தல் வாக்குறுதியின்போது, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவிப்பை வெளியிட்டு, தற்போது நிதி நெருக்கடியின் காரணமாக சிறு, குறு விவசாயிகளின் ரூ. 50 ஆயிரத்துக்கு உள்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், இயற்கை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் தேவேந்திரன், மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டப் பொருளாளா் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவா் ரத்தினவேல், சேலம் மண்டல தென்னை, பாக்கு, பனை விவசாயிகள் சங்கத் தலைவா் குமாா் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.