திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

மஹாபு பாட்சா

Updated On :16 மே 2026, 12:56 am IST

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரியைச் சோ்ந்தவா் மஹாபு பாட்சா (55), மீன் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 2025 ஆம் ஆண்டில் 5 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மஹாபு பாட்சாவை கைது செய்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, மஹாபு பாட்சாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அரசிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்படப் பணியாற்றியதற்காக அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் வனிதா, நீதிமன்றக் காவல் ரேவதி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.