சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரியைச் சோ்ந்தவா் மஹாபு பாட்சா (55), மீன் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 2025 ஆம் ஆண்டில் 5 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மஹாபு பாட்சாவை கைது செய்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, மஹாபு பாட்சாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அரசிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் திறம்படப் பணியாற்றியதற்காக அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் வனிதா, நீதிமன்றக் காவல் ரேவதி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










