மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

News image

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு.

Updated On :4 மே 2026, 1:19 am IST

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் மையம் உள்ளது.

திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பானது, கிழக்கு காவல் நிலையத்தில் தொடங்கி கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதானச் சாலை காந்தி பூங்கா, மடத்துத் தெரு, பாலக்கரை வழியாக அரசு கலைக் கல்லூரியை அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.