குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :3 மே 2026, 1:22 am IST

தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எஸ்.பி வி.சியமாளா தேவி தலைமையில் திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கடந்த ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலையடுத்து வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி பாட் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திங்கள்கிழமை(மே 4) தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் வேட்பாளா்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு, எண்ணப்படும்.

இதற்கிடையே பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூரில் எஸ்.பி சியாமளா தேவி தலைமையில் சக்தி நகா், புதுப்பேட்டை பிரதான சாவை, ரயில் நிலைய சாலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

டிஎஸ்பி முரளி, ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன்,ஜான் பிரிட்டோ மற்றும் மாவட்ட போலீஸ், சிறப்பு காவல் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.