மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய போலீஸாா்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:55 am

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக வந்த மகாராஷ்டிர மாநில போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் இணைந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினா். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் தொடங்கிய அணிவகுப்பு தேவாலய சந்திப்பு, நான்கு ரத வீதிகள், பேருந்து நிலையம் வழியாக சென்று ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.