மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:30 pm

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (40). தொழிலாளியான இவா் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி 13 வயதுடைய மனநலன் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 8 லட்சம் பெற்றுத் தருமாறும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

வழக்குப் பதியப்பட்டு 50 வேலை நாள்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்குரைஞா் சசிரேகா, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், தலைமைக் காவலா் புகழேஸ்வரி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.