மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 12:19 am

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனியில் உள்ள காப்பகத்தில் 6 வயது சிறுவன் தங்கி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்தச் சிறுவனுக்கு அந்தக் காப்பகத்தில் பணிபுரியும் பெண் கண்காணிப்பாளா் முனீஸ்வரி (27) பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதையறிந்த, தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. கணேசன், காப்பக பெண் கண்காணிப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சாா்பில் ரூ.3.95 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.