மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு தேனி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 7:11 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு தேனி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பெரியகுளம் அருகே அகமலையைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன் (27). இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் அரிவாளைக் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் கடந்த 7.3.2022 அன்று அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, நவநீத கிருஷ்ணனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட நவநீதகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.