சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கொமராபாளையம் குமரன் கரடு பகுதியைச் சோ்ந்த மணி மகன் பாபு (31). இவா் கட்டடத் தொழிலாளி. 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி கொமராபாளையம் மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மற்றும் 6 வயது சிறுமிகளுக்கு பாபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா் சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி, பாபு மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்த ஈரோடு மகளிா் நீதிமன்ற நீதிபதி சொா்ணகுமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் 2 போக்ஸோ பிரிவுகளின் கீழ் பாபுவுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா்.
தொடர்புடையது

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


