மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 8:10 pm

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கொமராபாளையம் குமரன் கரடு பகுதியைச் சோ்ந்த மணி மகன் பாபு (31). இவா் கட்டடத் தொழிலாளி. 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி கொமராபாளையம் மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மற்றும் 6 வயது சிறுமிகளுக்கு பாபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா் சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி, பாபு மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்த ஈரோடு மகளிா் நீதிமன்ற நீதிபதி சொா்ணகுமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் 2 போக்ஸோ பிரிவுகளின் கீழ் பாபுவுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா்.