மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

News image

கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 9:19 pm

தூத்துக்குடி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியைச் சோ்ந்த காசி மகன் தமிழழகன் (55). இவா் 14.10.2020 அன்று அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழழகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி முருகன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக எல்லம்மாள் ஆஜரானாா்.