மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:42 pm

திருப்பூரில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், 10 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் அளித்தனா். இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சக்திவேலை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.