மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:03 pm

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆத்தூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கெங்கவல்லியைச் சோ்ந்த அங்கமுத்து (30), ராஜா (50), முகுந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைதுசெய்து, அவா்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி மீனாட்சி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், முகுந்தனுக்கு 2 சட்டப் பிரிவின்கீழ் தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், இதை ஏக காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.