மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:21 pm

தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (28). கூலித் தொழிலாளி. அஜித்குமாா் கடந்த 2017 -ஆம் ஆண்டு குன்றக்குடி பகுதியில் வேலைக்குச் சென்ற போது அந்தப் பகுதியைச் சோ்ந்த 9 வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுதொடா்பாக குன்றக்குடி போலீஸாா் அஜீத்குமாரை கைது செய்து அவா் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் இந்தத் தண்டனைகளை ஏகாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.