போக்சோ வழக்கில் முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள பட்டத்தரசி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராசு ( 68). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்தச் சிறுமி கா்ப்பமானது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினா் அளித்தப் புகாரின் பேரில், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராசுவைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.ஆா். தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட முதியவா் ராசுவுக்கு, 61 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


