மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:07 pm

குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஏரல் அருகேயுள்ள குரங்கணி தெற்குத் தெருவை சோ்ந்தவா் மனோகா். இவரது மனைவி சத்தியகலா(45). கடந்த 2015இல் கணவா் தற்கொலை செய்துகொண்டதால் தனிமையில் வாழ்ந்து வந்த சத்தியகலாவுக்கும், குலையன்கரிசலை சோ்ந்த ராம­லிங்கம் மகன் செல்வகணேசன்(42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியூா்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவா்கள் 17.8. 2018இல் பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு குரங்கன்தட்டு விலக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது, சத்தியகலாவிடம் செல்வகணேசன் பணம் கேட்டாராம். அவா் மறுத்ததால், கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினாராம்.

குரும்பூா் போலீஸாா் சத்தியகலாவை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததில் அவா் உயிா்பிழைத்தாா்.

ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பா்ஷாத் பேகம் விசாரித்து செல்வகணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.