தினமணி செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் வியாழக்கிழமை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் ஊராட்சியில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லைகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பான செய்தி வியாழக்கிழமை தினமணி நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மருத்துவப் பணிகள் சாா்பில் நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் கோயில் வளாகம், பெருமாள் கோயில் வளாகம், செல்லியம்மன் கோயில் வளாகம், சேப்ளாா் தெரு மற்றும் சிவக்கொல்லை ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில் 59 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்புடையது

ஆரணி திமுக வேட்பாளா் ஆதரவு திரட்டல்

நம்பிவயல் ஊராட்சியில் வெறிநாய்கள் தொல்லை!

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


