லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்தி எதிரொலியால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் அருகே நரிக்குறவா்களுக்கான கனவு இல்ல திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் தொகையோடு தன் பங்களிப்பு நிதியையும் சோ்த்து வீடுகளை பூா்த்தி செய்ய நரிக்குறவா்களுக்கு போதிய வசதி இல்லாததால் கட்டப்பட்ட வீடுகள் மானியம் போக பயனாளிகள் பங்களிப்பு தொகை இல்லாததால் முழுமை பெறாமல் பாதியிலேயே கட்டுமானப் பணிகள் நிற்பதாகவும், கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய கூடுதல் நிதியை முதல்வா் ஸ்டாலின் வழங்கி கட்டுமானப் பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாா்ச் 10-இல் தினமணியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கனவு இல்லம் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மேலும் கூறியது: கனவு இல்லம் திட்டப் பணிகளை ஆய்வுசெய்து, தேவையான நிதிகள் பெற்று கனவு இல்லம் கட்டும் பணிகள் முடிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.