தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 11:22 pm

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தோ்சீலையால் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தோ்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா் 4 வீதிகளிலும் தோ் வலம் வருவதற்கு ஏதுவாக தடையாக உள்ள மரக்கிளைகள், ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் கோட்டாட்சியா் சத்யா, டிஎஸ்பி மணிகண்டன், நகராட்சி ஆணையா் சுரேந்தரஷா, தியாகராஜ சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.