திருவாரூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, குடவாசல் பேரூராட்சி ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், வலங்கைமான் பேரூராட்சிக்குள்பட்ட அரசினா் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றில், அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட எல்லைப் பகுதியான குடவாசல் காவல் சோதனைச் சாவடிக்குச் சென்று, கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், குடவாசல் வட்டாட்சியா் ஸ்டாலின், தோ்தல் வட்டாட்சியா்கள் (குடவாசல்) ரவி, (வலங்கைமான்) ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சமவாய்ப்புக்குள்படுத்துதல் பணிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


