மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :25 மார்ச் 2026, 12:19 am

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதையடுத்து, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில், வாக்கு இயந்திரம் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, திருவாரூா் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.