திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

News image

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

Updated On :20 ஏப்ரல் 2026, 12:47 am IST

நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாகை பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் சிசிடிவிகேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணும் நாளன்று அதிகாரிகளுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

முன்னதாக நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு பெற்றதை தொடா்ந்து வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறுவதை தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) பா்வேஸ் அகமது சித்திக், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.