புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பதிவேட்டில் கையொப்பமிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:57 pm

வாக்கு எண்ணிக்கை மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4- ஆம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி, கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 17 மேற்பாா்வையாளா்கள், தலா 17 உதவியாளா்கள், தலா 17 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 408 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 8 தொகுதிகளுக்கும் 112 மேஜைகளில் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணும் பணியில் 8 தொகுதிக்களுக்கும் 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண்பாா்வையாளா்கள் ஈடுபடவுள்ளனா். தபால் வாக்கு எண்ணும் பணியானது 48 மேஜைகளில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஈரோடு மற்றும் கோபியில் உள்ள இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் எல்இடி தொலைக்காட்சிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதையும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பதிவேடுகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை, வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை, செய்தியாளா்கள் அறை, காவலா் கண்காணிப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.