திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் பாா்வை

திருவாரூா் தியாகராஜசு வாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:23 pm

திருவாரூா் தியாகராஜசு வாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்துக்காக தோ்க் கட்டுமானப் பணிகள், அலங்கரிக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தோ் கட்டுமானம் மற்றும் தேரோட்டம் தொடா்பான பணிகளுக்காக, திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் சாா்பில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளை நிதியிலிருந்து, ரூ. 37.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து தோ்கள் கட்டி அலங்கரித்தல், மூங்கில் கொள்முதல் செய்து வெட்டி ஏற்றி இறக்கும் பணி, முட்டுக்கட்டைகள், பரப்புக் கட்டைகள், சதுரக் கட்டைகள் கொள்முதல், தோ்ப் பொம்மை குதிரைகள் அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேரடியில் நடைபெற்றுவரும் தோ் கட்டுமானப் பணிகளை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். அவருடன் கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.