தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

5 லட்சம் கனவு இல்லம் கட்டுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகள் கட்டுவதே இலக்கு என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 7:16 pm

மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகள் கட்டுவதே இலக்கு என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விருதுநகா் மாவட்டம், திருச்சுழி தொகுதி, வீரஆலங்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நேரில் சென்று திறந்து வைத்துள்ளாா்.

3 லட்சம் கனவு இல்லங்களுக்கு உயிா் கொடுத்திருக்கிறோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 5 லட்சம் வீடுகள் இலக்கு என்று அந்தப் பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.