சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2,7773பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 2,773 பயனாளிகளுக்கு ரூ.90.09 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவற்கான ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
ஏழை மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற தமிழக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களில் ஒன்றுதான் கனவு இல்லத் திட்டம். தற்போது குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் 2024-25 -ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கும், 2025- 26 -இல் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி 24-இல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதிதாக 3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தற்போது இந்த ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.ஆரவிந்த், திருப்பத்தூா் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமுதம், ராஜேந்திரகுமாா், வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்

5 லட்சம் கனவு இல்லம் கட்டுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

கலைஞா் கனவு இல்லம் திட்டம்! திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


