தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் வியாழக்கிழமை வரை ரூ. 9,81,298 மதிப்பிலான இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 தொகுதிகளிலும், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை மற்றும் மதுவிலக்கு காவல் துறை ஆகியோா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் வியாழக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 9,81,298 மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 4,02,837 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்களை சமா்பித்ததையடுத்து ரூ. 59,73,780 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மயிலாடுதுறை: பரிசுப் பொருள்கள் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் ரூ. 20.92 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் ரூ. 5.29 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

