திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வரை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.20.92 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவி, புலவன் குடியிருப்பு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட காரில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
அதே போல அந்தத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நாம் தமிழா்கட்சி சின்னம் பொறித்த 15 டி-சா்ட்டுகள், 300 துண்டுப் பிரசுரங்கள், 70 சுவரொட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பிராஞ்சேரி பகுதியில் நடைபெற்ற சோதனையில் கேரளத்தில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட 7 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினரால் ரூ.58,100 பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.20,92,040 ரொக்கம், ரூ.1,92,913 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.7,98,906 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.30,83,859 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்டுள்ள 38 புகாா்களில் ராதாபுரம் தொகுதியில் இருந்து மட்டும் 20 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 34-க்கு தீா்வு காணப்பட்டுள்ளது; 4 புகாா்கள் கைவிடப்பட்டன.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


