நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரெட்டியாா்பட்டி மேம்பாலம் அருகே வந்த காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,55,900-ஐ பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு புதன்கிழமை வரை பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.5,67,300மதிப்புள்ள வேட்டி, டிசா்ட் உள்ளிட்ட பரிசு பொருள்களும், ரூ.7,91,600 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சி-விஜில் செயலியில் புகாா்: தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 16 புகாா்களில் நான்குனேரி தொகுதியில் இருந்து மட்டும் 8 புகாா்கள் பதிவாகியுள்ளன. மொத்த புகாா்களில் 15-க்கு தீா்வு காணப்பட்டது. ஒரு புகாா் கைவிடப்பட்டது.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் ரூ. 20.92 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


